#Breaking:தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதல்!

#Breaking: Sri Lankan patrol ship collides with Tamil Nadu fisherman's boat!

கச்சத்தீவு அருகே இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து  500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகு கடலில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை ரோந்து கப்பல் மோதிய நிலையில்,கடலில் மூழ்கிய விசைப்படகில் இருந்த 7 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.