மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இறுதி சடங்கிற்கு நேரில் வந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அஞ்சலி செலுத்தினர்.
ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக பதவியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் (வயது 95) வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் இரவு அவர் உயிரிழந்தார்.
unknown node[Image source : India Tv]அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.அவரது நல்லடக்கம் இன்று பஞ்சாபில் அவரது சொந்த ஊரான லம்பி கிராமத்தில் நடைபெறுகிறது. இன்று பிரகாஷ் சிங் பாதல் அடக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
தேசிய தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலிசெலுத்து வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுததினார். அதே போல பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் லம்பி கிராமத்திற்கு வந்து பிரகாஷ் சிங் பாதலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
unknown nodePM Modi condolence on Parkash Singh Badal house[Image source : Hindustan Times]பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக, நேற்று (புதன்கிழமை) சண்டிகர் வந்து சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) அலுவலகத்திற்கு நேரில் சென்று தனது இறுதி அஞ்சலியை பிரகாஷ் சிங் பாதலுக்கு செலுத்தினார்.
மறைந்த பிரகாஷ் சிங் பாதல், 1970-1971, 1977-1980, 1997-2002 மற்றும் 2007-2017 ஆகிய காலகட்டங்களில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பாக பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் என்பதும், பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்ததில் இளம் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தான் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
