புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் காலமானார்

Bharatiya Janata Party nominee Member of the Legislative Assembly in Pondicherry Shankar died today of a heart attack.

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் இன்று காலமானார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போதைய முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார்.புதுச்சேரியை பொருத்தவரை அம்மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 பேரை எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமிக்கலாம்.அந்த வகையில் தான் மத்திய அரசு ,புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக இருந்த சங்கர், சாமிநாதன், செல்வகணபதி ஆகியோருக்கு நியமன எம்எல்ஏ பதவி  வழங்கப்பட்டது.

இந்நிலையில்  நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் மாரடைப்பால் இன்று உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைந்துள்ளது.