பென்னி குயிக் சிலை மூடப்படவில்லை-அமைச்சர் விளக்கம்.!

லண்டனில் தமிழக அரசால் நிறுவப்பட்ட பென்னி குயிக் சிலை, மூடப்படவில்லை என அமைச்சர் சாமிநாதன் விளக்கமளித்துள்ளார்.

லண்டனில் தமிழக அரசால் நிறுவப்பட்ட பென்னி குயிக் சிலை, மூடப்படவில்லை என அமைச்சர் சாமிநாதன் விளக்கமளித்துள்ளார்.

பல இடையூறுகளை தாண்டி முல்லைப்பெரியாறு அணையை, தனது சொந்த செலவில் கட்டிய பென்னி குயிக்கிற்கு, தமிழகத்தில் மரியாதை செலுத்துவது போல, அவரது சொந்த ஊரான லண்டனிலும் மரியாதை அளிக்கும் விதமாக தமிழக அரசால் சிலை வைக்கப்பட்டது.

தற்போது அந்த சிலை மூடப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்திருந்தார். அந்த தீர்மானத்தில் லண்டனில் நிறுவப்பட்ட பென்னிகுயிக் சிலை, சேதமடைந்து, மூடப்பட்டிருப்பதாக இபிஎஸ் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பென்னி குயிக் சிலை மூடப்படவில்லை, நல்ல முறையில் இருப்பதாக சட்டப்பேரவையில் விளக்கமளித்திருக்கிறார், சிலை திறக்கப்படுவதற்கு முதல் நாள் எலிசபெத் ராணி மறைந்ததாக அந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.