380 கி.மீ., 20 மணி நேரம் பயணத்திற்கு பின் ராமாபுரம் தோட்டத்திற்கு வந்த சசிகலா

சென்னை ராமாபுரம் தோட்டத்திற்கு வந்த சசிகலா எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.

சென்னை ராமாபுரம் தோட்டத்திற்கு வந்த சசிகலா எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.

பெங்களூரில் இருந்து நேற்று காலை சென்னை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சசிகலா ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர் வழியாக தனது பயணத்தை தொடர்ந்தார், அவரது தொண்டர்கள் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தேவனஹள்ளியிலிருந்து சென்னை இடையிலான சுமார் 380 கி.மீ. தூரத்தை அவர் கடக்க 20 மணி நேரத்திற்கும் மேலானது.இதனால் அவரது பயணம் இரவு வரை நீடித்தது.

பெங்களூருவில் இருந்து நேற்று சென்னைக்கு கிளம்பிய வி கே சசிகலா இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் ராமாபுரம் தோட்டத்திற்கு வந்தடைந்தார்.அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்ற அவர் ,எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பிறகு அங்கிருந்து புறப்பட்ட சசிகலா  தி.நகரில் உள்ள வீட்டிற்கு வந்தடைந்தார்.