எலிசபெத் ராணி மறைவு…! நாளை வடக்கு அயர்லாந்து செல்கிறார் மன்னர் சார்லஸ்…!
இறுதி சடங்குக்கு முன்னதாக பிரிட்டனின் பல்வேறு பகுதிகளுக்கும் மன்னர் சார்லஸ் நேரில் செல்ல உள்ளார்.
பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டனின் புதிய பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், மறைந்த எலிசபெத் ராணிக்கு வரும் 19-ஆம் தேதி இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இறுதி சடங்குக்கு முன்னதாக பிரிட்டனின் பல்வேறு பகுதிகளுக்கும் மன்னர் சார்லஸ் நேரில் செல்ல உள்ளார். அதன்படி, நாளை வடக்கு அயர்லாந்து செல்கிறார். அதனை தொடர்ந்து, இந்த வார இறுதியில் வேல்ஸ் செல்கிறார்.