திராவிடமாடல் அரசின் ஒரே லட்சியம் இதுதான் – அமைச்சர் உதயநிதி

Udhayanidhi

நெல்லையில், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் 8,844 பயனாளிகளுக்கு சுமார் ₹157.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கும் இந்த உரிமை தொகை திட்டம் இரண்டாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கர்நாடக, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மகளிர் மட்டுமன்றி திருங்கையர், மாற்று திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் சொன்னது போல தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறது.

அரசின் நலத்திட்டங்கள் உடனுக்குடன் மக்களை சென்றடைய வேண்டும், குறிப்பாக ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பது தான் நமது திரவிட மாடல் அரசின் லட்சியம் ஆகும். பெண்ணுரிமை குறித்து பெரியார் கண்டா கனவுகளுக்கெல்லாம் நமது திராவிட மாடல் அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞரை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்