#Breaking:திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்..! என்னென்ன தளர்வுகள்?

The new regulations came into effect in Tiruppur district from today.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் குறைக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.இதனை மாவட்ட ஆட்சியர் நேற்று இரவே செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.அதன்படி,

பால் ,மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மளிகைக்கடைகள்,காய்கறிக் கடைகள்,பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட மட்டுமே அனுமதி.

திருப்பூர் மாநகரத்தில் அமைந்துள்ள கீழ்கண்ட 33 வணிக பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள கீழ்கண்ட வணிக பகுதிகள் ஆகிய பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் மற்றும் உணவுபொருட்கள், இறைச்சி, கோழி, மீன் விற்பனை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இயங்க முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது.

உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% இருக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி.

உணவகங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்கெட் மற்றும் பன்னடுக்கு வணிக வளாகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை.

கேரள மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

கேரளாவில் இருந்து திருப்பூர் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுத்த RTPCR கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.இல்லையென்றால் இருதவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூடாதவாறு அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node