தமிழகத்தில் 54 அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை – அதிர்ச்சி தகவல்!

Default Image

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக உள்ளது.எனினும்,அப்பள்ளிகளில் ஆங்கிலத்திலும் பயிற்று மொழியாக வகுப்புகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்றும்,மாறாக அப்பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே  பயிற்று மொழியாக கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்து தகவல் உரிமைச் சட்டம் மூலம்  கேட்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சென்னை,கிருஷ்ணகிரி, திருப்பூர்,நீலகிரி, செங்கல்பட்டு,ஈரோடு, சேலம்,கடலூர்.,சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழும் பயிற்று மொழியாக இருந்த இப்பள்ளிகள்,தற்போது ஆங்கிலம் மட்டுமே  பயிற்று மொழியாக கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஆனால்,தமிழைத் தவிர்த்து ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட அரசு பள்ளிகள் ஒன்று கூட இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்