அதிர்ச்சி:திருச்சி NIT மாணவி தூக்கிட்டு தற்கொலை – காவல்துறை விசாரணை!

Default Image

திருச்சி:என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது பள்ளி,கல்லூரி மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில்,திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரவை சேர்ந்தவரான மாணவி சௌமியா (வயது 22),திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி பிடெக் சிவில் இரண்டாம் ஆண்டு பபடித்து வந்த நிலையில்,நேற்று விடுதியில் யாரும் இல்லாதபோது  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்துக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்