ஆன்லைன் மருந்து விற்பனை : தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை

Default Image

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனையை முறைபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிடும் வரை ஆன் லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆன் லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், வழக்கின் விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்து அவர்கள் உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்