ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்காக தயாராகும் ஐம்பொன் சிலை..!

Default Image

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பின் ராவத்தின் வீரத்தை போற்றும் வண்ணம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சைன் இந்தியாவின் சோல்ஜர் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் 120 கிலோ எடை கொண்ட பிபின் ராவதின் மார்பளவு சிலையை தயாரித்து அதை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு.

கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 12 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்களது மரணம் நாட்டையே உலுக்கிய நிலையில், குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அன்ஜலி செலுத்தினர்.

இந்நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பின் ராவத்தின் வீரத்தை போற்றும் வண்ணம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சைன் இந்தியாவின் சோல்ஜர் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் 120 கிலோ எடை கொண்ட பிபின் ராவதின் மார்பளவு சிலையை தயாரித்து அதை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வீதியில் உள்ள சிற்ப கூடத்தில் ஐம்பொன்னாலான சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக அவரது உருவம் தத்ரூபமாக  களிமண்ணால்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று, பின்,டெல்லி இந்தியா கேட் போர் நினைவுச் சின்னம் அருகில் பிரதமர் மோடியிடம் இந்த சிலையை அளிக்க உள்ளதாகவும் முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்