இல்லத்தரசிகளே….! இன்று முதல் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்…!

Default Image

இன்று முதல் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு, டோர் டெலிவரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போது தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு, டோர் டெலிவரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை பொருட்களை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களை வாகனங்களில்  கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்