#Gold: தங்கம் விலை சவரனுக்கு ரூ.456 உயர்வு.!

Default Image

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.456 உயர்ந்து , ஒரு சவரன் ரூ.38,520-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை, 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.40 க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 உயர்ந்து, ரூ.67,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்