சென்னையில் பெண்களுக்கான உதவி மையத்தை தொடக்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர்..!

Default Image

சென்னையில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னையில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். மேலும், 181 என்ற இலவச எண்ணில் உதவி மையத்தில் பெண்கள், சிறார்கள் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையர் சங்கர் ஜிவால், ‘நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகநலத் துறை உதவியுடன் இந்த உதவி மையம் செயல்படும் என்றும் , பெண் வன்கொடுமை, வரதட்சணை, குழந்தை திருமணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், பெண்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்