ஆன்லைன் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்ட கென்சில் செயலி…!

Default Image

ஆன்லைன் வகுப்புக்காக, சென்னையில் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கென்சில் செயலி.

இந்தியா முழுவதும்  வைரஸின் தாக்கம் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் மூமாக தான் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளின் போது சில அத்துமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்கவும், நெறிமுறைப்படுத்தவும் கென்சில் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.

இளைஞர்கள் இந்த செயலியை இந்திய கல்வி முறையை அடிப்படையாக கொண்டு, வடிவமைத்துள்ளனர். நேர அட்டவணை, வீட்டுப்பாடம் பதிவேற்றும் வசதி, ஆன்லைன் தேர்வுகள், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவது, பள்ளி கட்டணம் செலுத்துவது என அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செயலியை வடிவமைத்துள்ளனர்.

இந்த செயலியில், வகுப்புகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு, கிளவுடில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும், வகுப்புகள் தொடங்குவதற்கு முன் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து ஒடிபி வரும். அந்த ஒடிபியை பதிவு செய்து தான் மாணவர்களால் வகுப்பில் இணைய முடியும். மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ யாருடைய தொலைபேசி எண்ணும் தெரிய வராது என்பது இந்த செயலியின் சிறப்பம்சம்.

இந்த செயலியை 8 பேர் கொண்ட குழு உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலியை சென்னை மற்றும் வேலூரில் உள்ள 35 பள்ளிகள் பயன்படுத்தி வருகின்றது. மேலும் சில புதிய அப்டேட்டுகளுடன், அரசுப்பள்ளிகளுக்கும் இந்த செயலியை கொண்டு சேர்க்க இந்த குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்