பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – மீண்டும் ஒரு பெண் முன் வந்து வாக்குமூலம்!!

Default Image
  • பொள்ளாச்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் தமிழ்நாட்டை உலுக்கியது.
  • சுமார் 15 பெண்கள் என்னிடம் பேசினர்

பொள்ளாச்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் தமிழ்நாட்டை உலுக்கியது. இப்போது, மற்றுமொரு ​​பெண் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், முன்னாள் காதலன் தன்னை அவமானப்படுத்தி, பணத்தை பறிக்க அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, அவ்வப்போது பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறியுள்ளார்.

அந்த பெண் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்த கொடுமையை செய்தவனின் பெயரை குறிப்பிடவில்லை. இருந்தாலும், அவர் பேருந்து நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும், அதில் ரேஷன் பொருட்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை  கடத்துவான் என்றும் குறிப்பிட்டார். அவனை விசாரித்தால் மேலும்  பல விவரங்கள் தெரியவரும் எனவும் தைரியமாக தெரிவித்தார்.

இந்த புகாரை அளித்த பின், பிற பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்கள் அதிகாரிகளுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.”சுமார் 15 பெண்கள் என்னிடம் பேசினர்,” என்று அவர் பேட்டியில் கூறினார்.

பொள்ளாச்சி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேர், என்னை எந்த விதத்திலும் சீண்டவில்லை. நான் கூறுவது முற்றிலும் வேறு நபர்கள் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்,  அவர்கள் இவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்