இன்று முதல் சென்னையில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும் – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

Default Image
  • தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்.
  • சென்னையில் இன்று முதல் அனைத்து சிக்கல்களும் இயங்கும்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதை பார்ப்பது அரிதாக இருந்தது. அந்த வகையில் சென்னையிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில். கடந்த இரண்டு வாரங்களாக சாலைகளில் எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அவசர தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதனையடுத்து இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இன்று முதல் அனைத்து சிக்கல்களும் இயங்கத் தொடங்கும் என்றும், போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்