8 வழிச்சாலை திட்டம் : ஜூலை 31-ஆம் தேதி விசாரணை -உச்சநீதிமன்றம்

Default Image

8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,

எத்தனை பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்?  என்று கேள்வி எழுப்பியது.இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ளது. இப்பணிகளுக்கு உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டது.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? என்று உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது.  சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று  மத்திய அரசு உறுதி அளித்தது.

பின் வழக்கின் விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வழக்கு தொடர்பாக நாளை மத்திய அரசு மனுத்தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army