மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சோகம்.. 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

சென்னையில் மின்சாரம் தாக்கி ஆலிமா என பெண் உயிரிழந்தது தொடர்பாக இரண்டு ஊழியர்களை ஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சுற்றி பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு பெரியார் நகரில் மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி அலிமா என்ற பெண் உயிரிழந்தார்.
மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் ஒரமாக செல்ல முயன்றபோது, மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட்ட காரணத்தினால், அப்பகுதி மக்கள் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்திடம் பல முறை புகாரளித்துள்ளனர்.
அதிகாரிகளின் அலட்சியமே அந்தப்பெண் உயிரிழந்ததற்கு காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்தநிலையில், மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தது தொடர்பாக அந்த பகுதியின் உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கட்ராமன் ஆகிய இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!
May 31, 2025
கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!
May 31, 2025