#BREAKING : தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்யலாம்- உயர்நீதிமன்ற மதுரை கிளை

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் போலீசார்  மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் போலீசார்  மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து  வருகின்றனர்.

அந்தவகையில் இன்று தந்தை -மகன் உயிரிழந்த வழக்கை  சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு  பிறப்பித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் மேலும் வழக்கினை இன்றே கையில் எடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மற்றும் பிரேதப்பரிசோதனையின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.