செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக தடுப்பூசி செலுத்துக – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Default Image

செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக தடுப்பூசி செலுத்துக.  

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக்கு மாண்டவியா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த மாதம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக, 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்படுகின்றன. செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக அனைத்து மாநில ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட முயற்சிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்