ஒப்பந்தத்தை மீறி ராணுவத்தை குவிக்கக்கூடாது -மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Default Image

ஒப்பந்தத்தை மீறி ராணுவத்தை குவிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது.இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களாக பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங்  3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன ராணுவ அமைச்சரான வி வெங்கையை சந்தித்து பேசியுள்ளார்.இந்த சந்திப்பில்,இந்தியா-சீனா உறவுகள் குறித்து இரு அமைச்சர்களும் வெளிப்படையாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா எல்லைப் பகுதியின்  கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்டது குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.சீன துருப்புக்களின் நடவடிக்கைகள், ஏராளமான துருப்புக்களை குவித்தல்,  ஆக்கிரோஷமான நடத்தை மற்றும் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகள் ஆகியவை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக  அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்