பாபர் மசூதி இடிப்பு வழக்கு – 30-ஆம் தேதி தீர்ப்பு

Default Image

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்  என்று லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தது.இதனையடுத்து லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.இதனால் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்ட 32 பேரிடம் விசாரணை முடிந்தது. அதே நேரத்தில் வழக்கு நடவடிக்கைகளை முடித்து, தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் அறிக்கை அனுப்பினார்.இதை பரிசீலித்த உச்சநீதிமன்றம்  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க மேலும் ஒரு மாத காலம் அவகாசம் ( அதாவது செப்டம்பர் 30-ஆம்  தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்  என்று லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட 32  பேரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்