கடன்களை செலுத்தி விடுகிறேன் , வழக்குகளை முடித்து விடுங்கள் – விஜய் மல்லையா

கடன்களை செலுத்தி விடுகிறேன் , வழக்குகளை முடித்து விடுங்கள் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை தேதி நீதிமன்றம் வழங்கியது.
பின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.இதற்குஇடையில் தான் விஜய் மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை மீட்டெடுக்க இந்திய அரசு அறிவித்துள்ளதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா தேவைக்கு ஏற்றது போல ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம்.ஆனால் நான் பலமுறை 100% கடனை திரும்ப செலுத்துகிறேன் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.ஆனால் அந்த கோரிக்கை புறந்தள்ளப்பட்டு வருகிறது.நான் செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்திவிடுகிறேன்.மேலும் என் மீது உள்ள வழக்குகளை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to the Government for a Covid 19 relief package. They can print as much currency as they want BUT should a small contributor like me who offers 100% payback of State owned Bank loans be constantly ignored ? Please take my money unconditionally and close.
— Vijay Mallya (@TheVijayMallya) May 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025