ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் – ராஜ்நாத் சிங் பேச்சு

Default Image

எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 ‘கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை’ குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்து வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,இருதரப்பு உறவுகளைப் பேணுவது முக்கியமானது.சீனாவின் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை கெடுத்துவிட்டன. எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எல்லையில் பதற்றத்தை தணிக்க 9 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

பாங்கோங் ஏரி பகுதியில் இந்தியாவும் சீனாவும் முழுமையான  படைகளை விலக்க  ஒப்புக் கொண்டன என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இதனால் அமைதியை  பேண முடியும்.சீன எல்லையில் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள்.ஒரு இன்ச் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்பதை நமது பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன.லடாக் எல்லையில் எந்த சோதனை ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்