கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடிய மம்தா!

Default Image

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, கொரோனா வைரஸ் குறித்து, ஒரு விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ளார். அதற்கு, அவரே இசை வடிவம் கொடுத்துள்ள நிலையில், பிரபல வங்க பாடகரான அமைச்சர், இந்திரனில் சென் பாடியுள்ளார். 

 இந்தப் பாடல்,  45 விநாடிகள் ஒலிக்கும். கொரோனாவுக்கு எதிரான ஊடரங்கின் முக்கியத்தை கூறுகிறது. அதேவேளையில், ‘மக்கள் பயம் கொள்ள வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றும்,  நோய் பரவாமல் தடுக்க, தொடர்பின்றி இருப்பதை வலியுறுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்