"சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தை மேற்கொள்வேன்"- மம்தா பானர்ஜி!

West Bengal Chief Minister Mamata Banerjee has said she will campaign in a wheelchair if she doesn't get cured.

சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தை மேற்கொள்வேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு பின் காரை நோக்கி செல்லும்போது அவரை சிலர் தள்ளிவிட்ட காரணத்தினால், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து கூறிய அவர், தனது காலில் ஏற்பட்டுள்ள தசைநார் பிரச்சினையால் கடும் அவதிப்படுவதாகவும், இன்னும் சில நாட்களில் உடல்நிலை தேறி வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். மேலும் பேசிய அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தை மேற்கொள்வேன். அதுவரை பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல், தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.