கர்நாடகாவில் வீடற்ற பெண்ணை கொலை செய்து கற்பழித்த கொடூரன் – சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை!

Default Image

கர்நாடகாவில் வீடு இன்றி நடுரோட்டில் துங்கி கொண்டு இருந்த பெண்ணை கொலை செய்து கற்பழித்த மர்ம நபரின் செயல்கள் அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவிலுள்ள ஹசான் எனும் மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நள்ளிரவு வெள்ளை சட்டை அணிந்து ஜீன்ஸ் அணிந்து வந்த ஒருவர் கையில் பெரிய சிமெண்ட் கல்லை வைத்துக்கொண்டு, கன்னிகா பரமேஸ்வரி எனும் கோவிலின் அருகே உள்ள பெங்களூர் மங்களூர் சாலையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் தலையில் வைத்து இருந்த சிமெண்ட் கலை போட்டுள்ளார்.

பின்பு அவர் அவ்விடத்தை விட்டு வேகமாக ஓடி விட்டார்,  12.03 க்கு இதை செய்துள்ளார், அதன் பின் 12 .40 வரை அந்த பெண் உயிருக்கு போராடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பின்பு அதே நபர் 12 . 58 க்கு மீண்டும் அந்த இடத்திற்கு திரும்பி வந்து, சிமெண்ட் கல்லை அப்பெண்ணின் தலையில் இருந்து எடுத்துவிட்டு மூன்று நிமிடங்கள் கழித்து அவர் இறந்து விட்டாரா என்று அவரை பரிசோதித்து பின் அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த பெண்ணை நிறுத்தி வைத்து அவரை கற்பழிக்க முயற்சித்துள்ளா.ர் இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடும் பணிகள் நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்