மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30% வரை அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன்

Default Image

மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30% வரை அதிகரிக்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

 ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி , நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று  டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.

அதில்,மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30% வரை அதிகரிக்கப்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மருத்துவ துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்கள் உருவாக்குவதற்கு தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்