கேரளா தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவிடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை!

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷிடம் அமலாக்கத்துறையினர், சிறையில் வைத்தே 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தங்கக்கடத்தல் வழக்கை அமலாக்கத்துறை , சுங்கத்துறை மற்றும் என்ஐஏ தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷிடம் விசாரணை நடத்த கொச்சி முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். அதற்கு நீதிமன்றம், ஸ்வப்னாவை சிறையில் வைத்தே நாளை மற்றும் நாளை மறுநாள் விசாரணை நடத்த அனுமதியளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025