தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ரங்கசாமி…!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் சந்தித்தனர்.
இதனை அடுத்து ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தெலுங்கானா செல்வதால், முதலமைச்சர் மற்றும் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.