நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்

Default Image
  • நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 
  • நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.நித்தியானந்தாவிற்கு குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதன் விசாரணையம் நடைபெற்று வருகிறது.  இந்த வேளையில் தான்  நித்தியானந்தா சார்பாக புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணம் செய்யப்பட்டது.ஆனால் இவரது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது.ஆனால் இது ஒரு புறம் இருக்க தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைலாச என்ற தனி நாட்டை உருவாக்குவதாக  அறிவித்தார் நித்தியானந்தா.இது ஒரு பெரும் விவாதமாக வெடித்தது.

ஆனால் கர்நாடகாவில் நித்தியானந்தாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வகையில் நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க  சர்வதேச காவல்துறையான இன்டர்போலிடம் குஜாரத் காவல்த்துறை கோரிக்கை வைத்தது.இந்த கோரிக்கையை ஏற்று  சர்வதேச காவல்துறையா ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய, புளு கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்