வீட்டுவசதி திட்டத்திற்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

Default Image

வீட்டுவசதி திட்டத்திற்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி  நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.இந்நிலையில் இன்று மாலை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கடன் உடன் இணைந்த மானியத் திட்டத்தின் கீழ் வீட்டுவசதி திட்டத்திற்கும், நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் .இந்த திட்டத்தின் கீழ் 3.3 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. இந்த திட்டம் 2021 மார்ச் வரை நீட்டிக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்