நடிகர் சரத்குமாரின் போலி மொபைல் நம்பர் உருவாக்கம் – சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார்!

நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமாகிய சரத்குமாரின் மொபைல் நம்பர் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.

நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமாகிய சரத்குமாரின் மொபைல் நம்பர் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே சமத்துவக் கட்சி தலைவரும், தமிழ்த் திரையுலகின் நடிகருமான சரத்குமார் அவர்கள் பெயரில் பல விஐபிகளுக்கு அழைப்புகள் சென்றுள்ளதாகவும், தனது செல்போன் எண்ணை போலியாக உருவாக்கி மோசடியில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.

சரத்குமார் காவல் ஆணையரிடம்  கொடுத்துள்ள புகாரின்  அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போலி என் மூலம் சரத்குமாருக்கு வந்த பதிவு விவரங்களையும் போலீசாருக்கு சரத்குமார் கொடுத்துள்ளார்.