Prantai : நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரண்டை துவையல்..!

immunity

பிரண்டை மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். பிரண்டையின் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் உள்ளது. பிரண்டை துவையல், பிரண்டை கஞ்சி, பிரண்டை பானம் போன்ற உணவுகளை நாம் தயார் செய்யலாம்.

பிரண்டையில் பசியைத் தூண்டும் ஆற்றல் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய  உதவுகிறது. இது தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பிரண்டை கருத்தரித்தலை மேம்படுத்த  உதவுவதோடு, இது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. தற்போது இந்த பதிவில் பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பிரண்டை – ஒரு கட்டு
  • நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • வரமிளகாய் – 10
  • புளி – சிறிய எலுமிச்சை அளவு
  • பூண்டு – 10 பற்கள்
  • கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு – 1 மேசைக்கரண்டி
  • தேங்காய் – அரை மூடி
  • இஞ்சி – சிறிய துண்டு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் பிரண்டையை  தோல் சீவி நன்கு கழுவி, கடாயில் போட வேண்டும்.பின் வர மிளகாய், புளி, பூண்டு  ஆகியவற்றை போட்டு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க – MurungaiLeaf Bujji : முருங்கை கீரையில் பஜ்ஜி செய்யலாமா..? அது எப்படிங்க..?

பின்பு அதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும், பின்  உளுத்தம் பருப்பை தனியாக வறுத்து எடுத்து அரைத்து வைத்துள்ளதுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உளுத்தம் பருப்பையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான ஆரோக்கியமான பிரண்டை துவையல் தயார்.

இந்த துவையலை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். இது சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்