எண்ணம் போல் வாழ்க்கை! உங்கள் கணவரை நல்லவராக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது!

உங்கள் கணவரை நல்லவராக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.

உங்கள் கணவரை நல்லவராக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.

இன்று திருமணமான பலர் தங்களது கணவருடன், உண்மையான உறவுடன் இருப்பது இல்லை. ஏதோ கட்டி வைத்து விட்டார்கள். இவருடன் தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வாழ்கின்றனர். இந்த எண்ணம் இருக்கிற வரை குடும்ப உறவுக்குள் சமாதானம், சந்தோசம் இருப்பது மிகவும் கடினம் தான்.

எந்த ஒரு கடினமான மனதுடைய ஆணையும், ஒரு பெண்ணால் மாற்ற முடியும். மனிதன் என்பவன் கடவுள் பாதி, மிருகம் பாதி செய்த கலவை தான். எனவே மனிதனிடம் இரண்டு குணங்களும் இருக்க கூடும்.

அவன் நல்லவனாக இருப்பதும், கெட்டவனாக இருப்பதும் நமது மனதின் எண்ணங்களை பொறுத்து தான் அமைகிறது. ‘எழவு வீட்டில் இருக்கும் ரோஜாவிலிருந்து பிண வாசனையும், திருமண வீட்டில் இருக்கும் ரோஜாவிடம் திருமண வாசனையும் வரும்.’

unknown node

இதற்கு காரணம் நமது மனது தான். இரண்டு இடத்தில் இருப்பதும் ஒரே பூ தான். ஆனால், நமது மனதின் எண்ணத்தை பொறுத்து தான் அதன் குணநலன்கள் மாறுகிறது. எனவே எல்லாவற்றிற்கும் காரணம் மனம் தான். உங்களது கணவரிடம் நல்ல முறையில் பேசுவதற்கு தகுதியானவர்கள் நீங்கள் மட்டும் தான். ஆனால், அதற்கு நீங்கள் மனம் வைத்தால் மட்டுமே முடியும்.

unknown node

கணவன் – மனைவி உறவுக்குள் சண்டைகள் வருவது வழக்கம் தான். திருமணமான முதல் ஒரு வருடம் தான் இப்படிப்பட்ட நிலை காணப்படும். பின் குழந்தை என்று வந்த பின் அவர்கள் இருவரின் கவனமும் குழந்தையின் பக்கம் திரும்பி விடும்.

unknown node

அழகோ, பணமோ இறுதிவரை நம்முடன் வர போவதில்லை. வாழ்வது ஒரு வாழ்க்கை. அதை நம்மை நம்மி இருப்பவர்களையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் துக்கப்படுத்தாமல், சந்தோசமாக வாழ்ந்துவிட்டு போவோம்.