மாலை நேரத்திற்கு ஏற்ற இனிப்பு சீடை எளிதில் செய்வது எப்படி...?

Here's how to put one together for use with your evening meal

மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் கடைகளில் சென்று வடை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே வித்தியாசமாக ஏதாவது செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். இன்று நாம் எப்படி வீட்டிலேயே எளிதாக இனிப்பு சீடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

வெல்லம்

பச்சரிசி மாவு

ஏலக்காய்தூள்

உளுந்த மாவு

தேங்காய் துருவல்

எண்ணெய்

எள்

செய்முறை

மாவு :முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பின் இதை ஒரு சுத்தமான துணியில் போட்டு, நன்கு உலர வைத்து அதன்பின் அரைத்து மாவாக இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.

வெல்லப் பாகு :வெல்லத்தை நன்றாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் இதை சிறிதளவு தண்ணீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி நன்றாக உருண்டு பதமாக பாகு போல வந்ததும் எடுத்துவிடவும். இந்த பாகுடன் வறுத்து வைத்த மாவு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

unknown node

கலவை :இறுதியாக ஒரு வாணலியில் எள்ளை சேர்த்து வறுத்து மாவுடன் கலந்து கொள்ளவும். பின்பு இதனுடன் வறுத்து அரைத்த உளுந்து மாவு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.

சீடை :பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்து நான்கு ஐந்து உருண்டைகளாக போட்டு மெதுவாக திருப்பி எடுக்கவும். அவ்வளவு தான், அட்டகாசமான இனிப்பு சீடை வீட்டிலேயே தயார்.