3,446 வேளாண் தொழில்நுட்ப உதவியாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!

UPSSSC AGTA: உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் வேளாண் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

UPSSSC

UPSSSC AGTA:உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் வேளாண் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

UPSSSC AGTA ஆட்சேர்ப்பு 2024 என்பது உத்தரபிரதேசத்தில் 3,446 விவசாய தொழில்நுட்ப உதவியாளர்கள் (AGTA) குரூப் C பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த அறிவிப்பை உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மே 1 அன்று முதல் மே 31, 2024 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.  காலியிடம், தேர்வு முறை, பாடத்திட்டம் அல்லது சம்பளம் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால்www.upsssc.gov.inஇல் உள்ள UPSSSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அதிகாரப்பூர்வ PDF அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம் .

எழுத்துத்தேர்வு:

முதன்மை எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்கள் 2 மணிநேரம் தேர்வு நடைபெறும். பொது அறிவு, அறிவியல் மற்றும் எண்கணிதம், இந்தி ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டு தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் 50 கேள்விகள் இருக்கும்.

ஆவண சரிபார்ப்பு:முதன்மை எழுத்துத் தேர்வுக்குப் பிறகு ஆவணச் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி, வயது, இருப்பிடம் போன்றவற்றின் அசல் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம்

பொது மற்றும் OBC: ரூ.25(SC) , (ST) : ரூ. 25உடல் ஊனமுற்றோர் : ரூ. 25

வயது

21 வயது முதல் 40 வயது வரை

பணி விவரங்கள்

வேளாண் தொழில்நுட்ப உதவியாளர்கள்- 3446

சம்பளம்

ரூ.25500 முதல் ரூ.81100 ரூபாய் வழங்கப்படுகிறது.