கிறிஸ்துமஸ் என்றால் என்ன?

Christmas is all about helping as much as you can and sharing the joy of being a true Christmas celebrant.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது தங்களால் இயன்ற உதவியை செய்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

கிறிஸ்துமஸ் என்பது அன்பை பகிர்ந்து கொள்வது தான். மற்றவர்கள் முகத்தில் சந்தோசத்தை பார்ப்பது தான் கிறிஸ்துமஸ். இருப்பவர்கள் இல்லாதவர்களோடு தங்களால் இயன்றவரை பகிர்ந்து கொடுத்து மகிழ்வது தான் கிறிஸ்துமஸ். இவ்வாறு தங்களால் இயன்ற உதவியை செய்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

டிச.25ம் தேதி தான் கிறிஸ்து பிறந்தார் என்று சொல்லமுடியாது. இந்த நாளில் அவர் பிறந்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன்முதலில் 4-ம் நூற்றாண்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் தான் கொண்டாடியதாக குறிப்புகள் கூறப்படுகிறது.

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் குடில் அமைத்து, கிறிஸ்துமஸ் மரங்களை வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிப்பதுண்டு. மேலும், வீட்டிற்கு வெளியே ஸ்டார் மற்றும் வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிப்பதுண்டு. இவ்வாறு கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.