வீடுகளில் ஒளிரும் விளக்குகள்! களைகட்டும் கார்த்திகை தீபத்திருநாள்!

Default Image

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண், பீங்கான்  மற்றும் கண்ணாடி போன்ற அகல்விளக்குகளை  வாங்கி, அவற்றுள் நெய் அல்லது எண்ணெய்  விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர்.

இதனை வீடுகளின் வாசற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள் மற்றும் முற்றங்களில் வைத்து அலங்கரிப்பார்கள்.  வீடுகளில் மட்டும் விளக்கேற்றாமல் அலுவலகங்கள், கோவில்களிலும் விளக்குகள் ஏற்றுவதுண்டு. சிலர் அவர்களது வீடுகளில் மூன்று நாட்கள் வரை விளக்கேற்றுவது உண்டு.

அதிலும், முக்கிய நிகழ்வாக திருவண்ணாமலையில், மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்