குழந்தை வரத்தை அள்ளித் தரும் கர்ப்பரட்சாம்பிகை கோவில்..! மருத்துவத்தையும் மிரள செய்யும் அதிசயம்..!
செல்வங்கள் 16 எனக் கூறப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குழந்தை செல்வம் தான். இது ஒரு வரமாகவே கருதப்படுகிறது. இந்த வரம் கிடைத்தாலும் அது பாதுகாப்பாய் நம் கைகளுக்கு வர பல சிக்கல்கள் இருக்கும். அந்தச் சிக்கலை போக்க ஓர் அதிசய ஆலயமாக கர்ப்பரட்சாம்பிகை கோவில் கூறப்படுகிறது. இக்கோவிலின் சிறப்பு மற்றும் பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தை பேருக்காக மருத்துவத்துறை அதிக அளவில் வளர்ச்சி அடைந்தாலும் சில நேரங்களில் மருத்துவ சக்தியே தெய்வ சக்தியின் மீது தான் நம்பிக்கை வைக்கப்படுகிறது.
இத்திருத்தலத்திற்கு செல்லும் வழி
கும்பகோணம் பகுதியில் பாபநாசம் அருகில் திருக்கருக்காவூர் கற்பரச்சாம்பிகை திருக்கோவில் அமைந்துள்ளது.
திருத்தலத்தின் வரலாறு
முன்பொரு காலத்தில் முல்லைவனநாதர் கோவில் சென்று அங்குள்ள அம்மனை வேண்டிக் கொண்டதால் அப்பெண் நீண்ட நாட்களுக்கு பின் கருவுற்றால். அந்தப் பெண் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு முனிவர் வந்து உணவு கேட்கிறார் அப்போது அந்தப் பெண் சோர்வுடன் இருப்பதால் தாமதமாக உணவு கொடுத்தார் ,கோபமடைந்த அந்த முனிவர் அப் பெண்ணுக்கு கரு கலைப்பு சாபத்தை கொடுத்துவிட்டார். இதனால் பதறிப் போன தம்பதியினர் அம்மனிடம் முறையிடுகிறார்கள். அம்மனும் கர்ப்பரட்சாம்பிகையாக தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்தில் வைத்து வளரும் நாள் வரை பாதுகாத்து குழந்தை பிறந்ததும் நைதுருவன் என பெயர் சூட்டி தம்பதியிடம் ஒப்படைக்கிறார். கருவை பாதுகாத்ததினால் கர்ப்பரட்சாம்பிகை என அழைக்கப்பட்டார்.
திருத்தலத்தின் சிறப்புகள்:
- இங்கு சிவன் முல்லைவனநாதராக காட்சியளிக்கிறார், இறைவன் சுயம்புலிங்கமாக தோன்றியுள்ளார். மேலும் இந்த லிங்கம் புற்றுமண்ணால் ஆனது .அதனால் அபிஷேகம் கிடையாது. இக்கோவிலின் பிரதானமாக அம்மன் காட்சியளிக்கிறார்.
- அடிக்கடி சிசு கலைந்து போவது, குறை பிரசவம் ஏற்படுவது மற்றும் சுகப்பிரசவம் ஆவதற்கு என குழந்தை பாக்கியத்திற்காகவே சிறப்பு வாய்ந்ததாக இக்கோவில் கருதப்படுகிறது.
- இத்திருத்தலத்தை சுற்றி அமைந்துள்ள சுற்றுவட்டார பெண்களுக்கு இதுவரைக்கும் கருச்சிதைவு ஏற்பட்டதில்லை எனவும் கூறப்படுகிறது. இங்குள்ள அம்மன் குழந்தை பேரு அளித்து அக்குழந்தை பாதுகாப்பாய் வளரும் வரை துணை புரியும் என நம்பப்படுகிறது.
பரிகாரங்கள்:
- கோவிலில் கிடைக்கும் நெய்யை வாங்கி அம்மன் பாதத்தில் வைத்து ஜெபிக்கப்பட்டு திரும்பவும் அந்த பக்தருக்கே கொடுக்கப்படுகிறது. அந்த கொடுக்கப்பட்ட நெய்யுடன் அரை கிலோ நெய்யுடன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குழந்தை பேரு கிடைக்கும். மேலும் அம்மன் சன்னதி முன் இருக்கும் வாசற்படியில் நெய்யை மொழுகி வேண்டுதலும் வைக்கப்படுகிறது.
- சுகப்பிரசவம் அடைய அங்கு விளக்கெண்ணெய் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. பிறகு நல்ல முறையில் குழந்தை பிறந்த பிறகு தங்கள் குழந்தையின் எடைக்கு நிகராக வாழைப்பழம், சர்க்கரை போன்ற தங்கள் சக்திக்கு ஏற்ப துலாபாரம் செய்கின்றார்கள்.
நம் முன்னோர்கள் கட்டிய ஒவ்வொரு ஆலயங்களுக்கும் பின்னால் பல அவிழ்க்க முடியாத மர்மங்களும் அதிசயங்களும் அடங்கியுள்ளது ஆகவே குழந்தை இல்லாமல் கவலைப்படுபவர்கள் ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசித்து குழந்தை வரத்தை பெற்று மகிழ்ச்சி அடையுங்கள்.