ஐபிஎல்2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் கோலகலமாக நடந்து வருகிறது.
ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை அணி நேற்று முன் தினம் களம் கண்டது.இந்த போட்டியில் மும்பை வீரர் ஹர்த்திக் பாண்டியாவின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் இனவெறிக்கு இன்றளவும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளில் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் வீரர்கள் இனவெறிக்கு முட்டிப்போட்டு ஒரு கையை உயர்த்தி எதிப்பு தெரிவிப்பது வழக்கம் இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக அரை சதம் அடித்த ஹர்த்திக் பாண்டியா மட்டை உயர்த்துவதற்கு பதிலாக முட்டிப்போட்டு கையை உயர்த்தினார் இதை சற்றும் எதிர்பார்க்காத பொலார்டு கைத்தட்டி பாண்டியாவிற்கு பாராட்டு தெரிவித்தார்.