"எப்போதும் சாந்தமாகவும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும்"- தோனி ஸ்பீச்!

After winning against KKR, CSK captain Dhoni highlighted the need to be humble and respect opposition despite setting a big target.

எல்லா அணியிலும் நிச்சியம் பெரிய ஹிட்டர்கள் இருப்பார்கள். எனவே எப்போதும் சாந்தமாகவும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் சென்னை அணி, தனது ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் தீபக் சஹர், 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டி முடிந்தவுடன் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, போட்டியின் 16-வது ஓவர் முதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் – பேட்ஸ்மேன்களுக்கும் இடையே கடுமையான போட்டியாக மாறியது. ரஸல் – கம்மின்ஸ் சிறப்பாக ஆடினார்கள்.

எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ, அதுதான் வெற்றிபெறும். கொல்கத்தா தனது விக்கெட்களும் வீழ்ந்துவிட்டது. இல்லையெனில் நிச்சியமாக போட்டியில் மாற்றம் இருக்கும் என்றும், போட்டியின் 16-வது ஓவர் முதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் – பேட்ஸ்மேன்களுக்கும் இடையே கடுமையான போட்டியாக மாறியது. ரஸல் – கம்மின்ஸ் சிறப்பாக ஆடினார்கள். எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ, அதுதான் வெற்றிபெறும் என்று கூறிய தோனி, ஆனால் கொல்கத்தா தனது விக்கெட்களும் வீழ்ந்துவிட்டது. இல்லையெனில் நிச்சியமாக போட்டியில் மாற்றம் இருக்கும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, எப்போதும் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் நல்ல ஸ்கோரை அடித்துவிட்டால் எதிரணியால் அதை துறத்த முடியாது என்று எதுவும் கிடையாது. வீரர்கள் நல்ல ஸ்கோரை அடித்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் ஒருபோதும் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

மேலும், எல்லா அணியிலும் நிச்சியம் பெரிய ஹிட்டர்கள் இருப்பார்கள். நிறைய விக்கெட்களை இழந்தாலும் அவர்கள் வருவார்கள். எனவே எப்போதும் சாந்தமாகவும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.