சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவின் புகைப்படத்தை பார்த்து எவ்வளவு அழகா வளர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனை தொடர்ந்து தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் இவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் .மேலும் அந்த திருமண நிகழ்வில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் குடும்பமும் கலந்து கொண்டுள்ளது . ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா ‘கனா’ படத்திலுள்ள ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை பாடி பிரபலமாகியதுடன், அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.இப்படியிருக்க ஆராதனாவை ரசிகர்கள் பார்த்து பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர் மிகவும் வளர்ந்து அழகாக உள்ளதாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனின் மகளின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node