உங்கள் விசுவாசம் எங்கே? மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து விலகியவர்களிடம் சனம் செட்டி கேள்வி!

Where is your allegiance to the people who left the People's Justice Center party? Sanam Shetty has said that you have deceived the people who voted for the People's Justice Center party for the first time.

மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்களிடம் உங்கள் விசுவாசம் எங்கே? முதல்முறையாக மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்களித்த மக்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் பெரும்பான்மையான இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களாக இருந்தவர்களும் ஆங்காங்கு பல இடங்களில் நல்ல ஓட்டுகளை பெற்று இருந்தனர்.

அதுபோல மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகர் கமலஹாசன் அவர்களும் மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார்.இதனையடுத்து கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர், துணைத் தலைவர் மற்றும் மதுரவாயலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர் பத்மபிரியா ஆகியோரும் கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் சனம் செட்டி.

அதில், உங்கள் விசுவாசம் எங்கே? கட்சியின் வேட்பாளராக பிரச்சாரம் செய்யும்போது மட்டும் எதற்காக சேர்ந்தீர்கள்? லட்சம் பேரிடம் ஏன் பேசினீர்கள். ஆனால் தற்பொழுது விலகும் போது மட்டும் தனிப்பட்ட காரணத்தால் விலகுகிறோம் என குறிப்பிட்டு விலகி  இருக்கிறீர்கள் ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கமலஹாசன் ஒரு அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை எனவும், அவரின் தொலைநோக்கு பார்வை அவருக்கு போதும் எனவும் சனம் செட்டி பாராட்டி பதிவிட்டுள்ளார்.

உங்கள் விசுவாசம் எங்கே? மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து விலகியவர்களிடம் சனம் செட்டி கேள்வி!