சினிமாவை விட்டு விலகும் பட்டாஸ் பட நடிகை..!! காரணம் என்ன...?

His close friend has said that he will leave the cinema after Mehreen's marriage.

மெஹ்ரின் திருமணம் முடிந்த பிறகு சினிமாவை விட்டு விலகப்போவதாக அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.

நடிகை மெஹ்ரின் தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் நடத்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், இவருக்கும் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோ என்பவருக்கும் திருமணம் ஆகவுள்ளது. இதற்கான நிச்சியதார்ததமும் முடிந்துவிட்டது.

unknown node

மேலும் நடிகை மெஹ்ரின்க்கு திருமணம் முடிந்த பிறகு நடிப்பாரா அல்லது நடிக்கமாட்டா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில், அதற்கான விடையை மெஹ்ரின் நண்பர் ஒருவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ” மெஹ்ரின் திருமணத்திற்கு பிறகு அவருடன் கணவரோடு டெல்லியில் செட்டிலாக திட்டமிட்டுள்ளார். சினிமாவை விட்டு விலகவும் முடிவெடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளார்கள்.