கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குவோம் – பா.ரஞ்சித்

Default Image

கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குவோம் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில், காவல்துறையை, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து பணியில் .

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா அச்சம் மக்களிடையே அதிகமாகிக் கொண்டே இருப்பதை, இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், மருத்துவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் வேதனையை போக்கவும், இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம் என்றும்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்