அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி.!

Suresh Chakravarty's love for Archana's love in the Big Boss house? Or the man who kills the man? That begs the question.

பிக்பாஸ் வீட்டினுள் உள்ள அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . தொடர்ந்து கடந்த வாரம் சுசித்ரா வீட்டிலிருந்து வெளியேறினார்.

சண்டை , சச்சரவுகள்,அழுகை , சந்தோசம் என அனைத்து உணர்வுகளையும் பிரிதிபலிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூபிஸம் உள்ளதாக கூறப்படுகிறது .அதில் அர்ச்சனா குரூப்பில் உள்ளவர்களை அன்பு என்ற பெயரில் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது .அது மட்டுமின்றி பாலாஜி அர்ச்சனாவின் அன்பை ஸ்டேட்டர்ஜி என்றும் கூறியிருந்தார் இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து கருத்துகளை தெரிவித்து வரும் சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது அர்ச்சனாவின் அன்பு குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.என்னுடைய மைண்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது, அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று சுரேஷ் சக்கரவர்த்தி அர்ச்சனாவின் அன்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.விரைவில் இதற்கான பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.