கெட்டதை பேசி பணம் சம்பாதிக்கிறாங்க…மேடையில் கடுப்பான விஜய் சேதுபதி.!

Default Image

கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதி ‘மாமனிதன்’ படத்துக்காக தேர்வு செய்யப்பட்டார்.

விருதை நேற்று வாங்கிய பிறகு மேடையில் பேசிய விஜய் சேதுபதி ” இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சி. மக்கள் நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கடந்துபோகாமல் அந்த படத்தின் மூலம் இயக்குநர்கள் என்ன சொல்ல வாரார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்களேன்- அஜித்திற்கு வில்லனாக நடிப்பீர்களா..? விஜய் சேதுபதி கொடுத்த நச் பதில்.!

எந்த விஷயம் என்றாலும், ஆரோக்கியமான விவாதங்களில் மட்டுமே ஈடுபடுங்கள். நம்மளுடைய வாழ்க்கையில் நாடாகும் அனுபவங்கள்தான் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. உங்களால் முடிந்த அளவிற்கு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, அதனை விமர்சனங்கள் வாயிலாக புரிந்துகொள்ளாதீர்கள். இப்போதெல்லாம் நல்ல படங்களை கூட யூடியூப்பில் கெட்டது பேசி தான் பணம் சம்பாதிக்கிறாங்க . காசுக்காக நெகட்டிவா விமர்சனம் பண்றாங்க” என சற்று கோபத்துடன் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்